மேற்கு வங்காளம்: 5 சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை... மேலும் ஒரு சிறுமி உயிர் ஊசல்!
ஜார்க்ராம்: மேற்கு வங்காள எல்லையில் உள்ள ஜார்க்ராம் அருகே ஜாம்போனி கிராமத்தில் 5 சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டனர். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சிறுமிகளின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.
உயிரிழந்த சிறுமிகள் நமிதா நாயக், பேபி நாயக், சரஸ்வதி நாயக், சோமா நாயக் மற்றும் பாலன் நாயக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் 13 முதல் 19 வயது கொண்டவர்கள்.
ஜார்கண்ட் எல்லையையொட்டிய ஒரோ கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுமிகளின் சடலத்தை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு வங்காளம் மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்ட போலீஸ் அதிகாரி கூறுகையில், "கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே சிறுமிகள் மயங்கிய நிலையில் கிடந்ததை பொது மக்கள் மாலை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் சிறுமிகளை எழுப்ப முயற்சித்துள்ளனர். இதனையடுத்து சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
5 சிறுமிகள் உயிரிழந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மற்றொரு சிறுமி பூஜா நாயக் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்று கூறியுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுமிகளில் மூன்றுபேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
சிறுமிகள் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications