5 வருடங்கள் முன்புதான் பாஜகவில் 'இணைந்த' எடியூரப்பா இப்போது முதல்வர்!
Recommended Video

பெங்களூர்: கடந்த தேர்தலை தனிக்கட்சி ஆரம்பித்து சந்தித்த பி.எஸ்.எடியூரப்பா இம்முறை பாஜக சார்பில் மீண்டும் முதல்வராக உள்ளார்.
2008ல் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், ரெட்டி சகோதரர்களுடன் ஏற்பட்ட மோதலால், 5 ஆண்டு காலத்தில், 3 முதல்வர்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக தலைமை.
கர்நாடகாவில், எப்போதும் அரசியல் குழப்பமாகவே காணப்பட்டது. பாஜக தலைமை தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தரவில்லை என்ற கோபத்தில், கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை துவக்கினார் எடியூரப்பா.

கர்நாடக ஜனதா கட்சி
பாஜகவில் இருந்த தனது ஆதரவாளர்கள் சிலரை அவரால் ஈர்க்க முடிந்தது. 2013 சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சியும் களம் கண்டது. முதல் தேர்தலிலேயே 10 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக பெரும் தோல்வி
ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, எடியூரப்பா கட்சி போன்ற காரணங்களால் பாஜக அத்தேர்தலில் வெறும், 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. இப்படி பாஜக தோல்விக்கு முக்கியமான ஒரு காரணமாக விளங்கிய எடியூரப்பா பிறகு மீண்டும் பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

எடியூரப்பாவே முதல்வர்
கர்நாடகாவில் பாஜகவை உருவாக்கி வளர்த்ததில் பெரும் பங்கு எடியூரப்பாவுக்குதான் உண்டு. விவசாயிகள் போராட்டத்தில் முன்னின்றுதான் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர். இதனால் அவரை தவிர்த்துவிட்டு மற்றொருவரை பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்த யோசிக்க முடியாது. எனவே இம்முறை எடியூரப்பாவே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் டிரெண்ட் அடிப்படையில் பார்த்தால், எடியூரப்பா முதல்வராகப்போவது உறுதி.

5 வருடங்களில் அபாரம்
கடந்த தேர்தலில் தனிக்கட்சியில் போட்டியிட்ட எடியூரப்பா இம்முறை பாஜக முதல்வர் வேட்பாளர். மாநில பாஜக தலைவரும் இவர்தான். வெறும் 5 ஆண்டுகளில் இந்த மாற்றம் சாத்தியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications