சாக்கடையில் வீசப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு - வீடியோ
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்புடைய 500, 1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புழக்கத்தில் உள்ள பழைய ரூ.500, ரூ.1, 000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல்கடும் சிரமபட்டு வரும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாக்கடையில் நேற்று பழைய ரூ.500 மற்றும் ரூ1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள், சாக்கடையில் கிழியாத நோட்டுகள் கிடைக்காதா என தேடினர்.
இதற்கிடையே, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கிழிந்த நோட்டுகளின் துண்டுகளை எடுத்து சென்றனர். கிழிக்கப்பட்டிருந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.25
முதல் ரூ 30 லட்சம் வரை இருக்கும் என்றும், கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் வங்கியில் மாற்ற முடியாமல் சாக்கடையில் வீசி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.