வங்கக் கடலில் நிலநடுக்கம்! சென்னை உட்பட பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன!!
Subscribe to Oneindia Tamil

புதன்கிழமை இரவு 9.52 மணிக்கு திடீரென நாடு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, ராஞ்சி, கயா, புவனேஸ்வர், கொல்கத்தா, சென்னை என பல நகரங்களில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.
சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லேசான அதிர்வுகளை ஏற்படுத்திய நிலநடுக்கமானது வங்கக் கடலில் ஒரிசாவின் பாரதீப் கடற்பரப்பில் இருந்து தென்கிழக்கே 275 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாக இது பதிவாகி இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலநடுக்கமானது சுமார் 40 வினாடிகள் நீடித்தன.. இதனால் எந்த ஒரு உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications