Andaman Earthquake: நள்ளிரவில் குலுங்கிய கட்டிடங்கள்.. அந்தமானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி
அந்தமான்: அந்தமான் பகுதியில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் (Andaman earthquake) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்குக் கட்டிடங்கள் குலுங்கின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு மக்கள் பீதியில் உள்ளனர். அதேநேரம் இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
உலகில் எப்போது எங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பதே தெரியாது. திடீரென ஏற்படும் நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் பல நேரங்களில் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது.

இதற்கிடையே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மன் ஆராய்ச்சி மையமான GFZ என்ற அமைப்பும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக GFZ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தீவுகள் அதிர்ந்துள்ளன. நள்ளிரவில் அந்தமானில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அஞ்சிய மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. டெல்லி-என்சிஆர் பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே டெக்டோனிக் தட்டுகளின் (tectonic plates) இயக்கமாகும். நமது பூமி மிகப் பெரிய டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இவை மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கும். இந்தத் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, மோதும்போது ஏற்படும் அழுத்தம் மற்றும் ஆற்றல் வெளிப்படுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications