"நான் பார்க்காத பாம்பா".. ஒரு பக்கம் கோபம் ஏற.. மறு பக்கம் விஷம் ஏற.. கடித்து துப்பிய தாத்தா!
தன்னை கடித்த பாம்பை முதியவர் கடித்து துப்பி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
காந்தி நகர்: "நான் பார்க்காத பாம்பா.. எத்தனை பாம்பை கொன்றிருப்பேன் தெரியுமா" என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரை பாம்பு கொத்திவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதியவரும் தன்னை கொத்திய பாம்பை கடித்து துப்பி உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்தவர் பர்வாத்சாலா பரியா. இவர் ஒரு விவசாயி. வயது 60.
இவரது வயலில் மக்கா சோளம் அறுவடை நடைபெற்றது. அவற்றை எல்லாம் கூலியாட்கள் ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதை பக்கத்தில் நின்று பர்வாத்சாலா கண்காணித்தவாறே இருந்தார்.

அலறி ஓட்டம்
அந்த நேரம் பார்த்து மக்கா சோளத்துக்குள் இருந்து ஒரு நல்ல பாம்பு வந்துவிட்டது. அங்கிருந்து போகாமல், அதே இடத்தில் படம் எடுத்து ஆடியது. பாம்பை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

பயம் இல்லை
ஆனால் பர்வத்சாலா மட்டும் ஓடவில்லை. அங்கிருந்தவர்களிடம், "நான் பார்க்காத பாம்பா, எத்தனையோ பாம்புகளை கையாலேயே பிடித்து நசுக்கி கொன்றிருக்கிறேன். கடித்தும் கொன்றிருக்கிறேன்" என்று சொல்லி கொண்டிருந்தார்.

நறுக்கென கடித்தார்
அந்த நேரம் பார்த்து நல்ல பாம்பு பர்வாத்சாலாவின் காலில் கொத்தியது. இதனால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சீறிக் கொண்டிருந்த பாம்பை தன் கையால் அலேக்காக பிடித்தார். உடனே பாம்பு பர்வாத்சாலா கை மற்றும் முகத்தில் கொத்தியது. விஷம் ஒரு பக்கம் ஏற, கோபம் ஒரு பக்கம் ஏற பர்வத்சாலா தன்னை கொத்திய பாம்பை நறுக்கென கடித்து துப்பினார்.

மயங்கி விழுந்தார்
ஏற்கனவே கொத்தி விஷம் உடம்பில் ஏற, பாம்பை இவர் போய் கடித்து துப்பியதால் அதன் மூலமாகவும் விஷம் ஏற, சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் விஷம் பரவிவிட்டது. இதனால் அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications