டெல்லியில் 60 வயது தாத்தா கூட இவ்வளவு மோசமா?... 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!
60 வயது முதியவர் ஒருவர் டெல்லியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
டெல்லி: டெல்லியில் 60 வயது முதியவர் ஒருவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு உண்மையை சொல்லாமல் இருக்க அந்த சிறுமிகளுக்கு ரூ. 5 கொடுத்து சரிகட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் தேன்மேற்கு பகுதியில் தான் இந்த படுபாதக செயல் அரங்கேறியுள்ளது. ஒரு வீட்டின் வாசலில் 5 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் இரண்டு பேர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 60 வயது முதியவர் முகமது ஜெயினுள் இரண்டு சிறுமிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் அவசர போலீஸ் 100க்கு தொலைபேசியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் முதியவரை கைது செய்துள்ளனர்.

சிறுமிகளுக்கு காசு கொடுத்து ஏமாற்றல்
போலீசாரிடம் முதியவர் அளித்த வாக்குமூலத்தில் இரண்டு சிறுமிகளையும் சாக்லேட் மற்றும் தின்பண்டம் வாங்கித்தருவதாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று ஒரு சிறுமி கண் முன்னே மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருக்க ரூ. 5 காசு கொடுத்து, இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

கதறிய சிறுமி
முதியவருக்கு பயந்து அந்த சிறுமிகளும் இது குறித்து யாரிடமும் எதுவும் கூறவில்லை. 5 வயது சிறுமி வலி தாங்க முடியாமல் அழுததையடுத்து அவளின் தாய் சிறுமியின் உடல் பாகங்களை பார்த்த போது அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடம் இது குறித்து கேட்ட போது நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட முதியவர்
சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து ஜெயினுள் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி இவ்வளவு மோசமா?
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் இருப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் நேற்று தான் புள்ளி விவரங்களை வெளியிட்டது. பெண்களுக்கு மட்டுமல்ல சிறுமிகளுக்கும் டெல்லி பாதுகாப்பில்லாத நகரம் தான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications