23 வயது மகளை பலாத்காரம் செய்த 64 வயது காமக்கொடூர தந்தை
மும்பை: மும்பையில் 23 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கந்திவாலியில் சாலையோரம் வசித்து வருபவர் 64 வயது மோகன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சாலையோரம் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் தூங்கிய பிறகு அவர் தனது 23 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து மோகனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மோகனை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோகன் அவருடைய பிற குழந்தைகளையும் பலாத்காரம் செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறு சிறு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் மோகன் அவரது மகளை முன்பும் பலாத்காரம் செய்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications