ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் கண்ணிவெடி தாக்குதல்- 12 பாதுகாப்பு படையினர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிர்டிக் பகுதியில் 4 அரசு ஊழியர்களை சனிக்கிழமையன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவர்களது கதி என்ன என இதுவரை தெரியவில்லை.
இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று கிர்டிக்கின் பரஸ்நாத் மலைப் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கைக்கு எதிராக 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 12 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் சம்பவத்தை கிர்டிக் எஸ்.பி. கிரந்தி குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications