காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் செம பதிலடி.... 7 பாக். வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லையோர கிராம அப்பாவி பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையின் பீம்பெர் செக்டாரில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலுக்கு நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications