மன உளைச்சலாக உள்ளது... தற்கொலைக்கு அனுமதியுங்கள்... 70 ‘வியாபம்’ கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி: மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என வியாபம் ஊழல் விசாரணையில் கைது செய்யப்பட்டு குவாலியர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் 70 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வியாபம் எனப்படும் மத்தியப் பிரதேச தொழில் கல்வி தேர்வு வாரியத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார் நாட்டையே பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில் தற்போது உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு குவாலியர் சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 70 பேர் சேர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ‘சிறைக்குள் நாங்கள் மனரீதியாக மிகுந்த உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறோம். அதனால், எங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்' என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வியாபம் ஊழல் தொடர்பாக புதிதாக 5 பேர் மீது 3 புதிய வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications