ஹைதராபாத்தில் பேத்தி வயது பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த 70 வயது தாத்தா
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 70 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மாதபூர் பகுதியை சேர்ந்தவர் சோமி ரெட்டி(70). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது வீட்டில் 27 வயது பெண் வேலை செய்து வந்தார். அவர் அந்த வீட்டில் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் சோமி ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் சோமி ரெட்டி என்னை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் ஜூன் 10ம் தேதி மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் நான் அவரிடம் இருந்து தப்பியோடி வந்துவிட்டேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சோமி ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோமி ரெட்டி கைது செய்யப்பட்டாரா, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டாரா என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications