இந்தியாவுக்குள் தப்பி ஓடிவந்த 75 மியான்மர் ராணுவ வீரர்கள்..மேலும் பலர் மிசோரம் மாநிலத்தில் தலைமறைவு?
ஐஸ்வால்: மியான்மர் நாட்டில் ஆயுதக் குழுவினருடனான மோதலைத் தொடர்ந்து அந்நாட்டு ரானுவ வீரர்கள் 75 பேர் இந்தியாவுக்குள் தப்பி ஓடிவந்தனர். மேலும் பலர் மிசோரம் மாநிலத்தின் வனப் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய எல்லையோர பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆயுத குழுக்கள் கை ஓங்கி இருக்கிறது. இதனால் மியான்மர் ராணுவம்- ஆயுத குழுக்களிடையே தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது.

அண்மையில் இந்திய எல்லையில் மியான்மர் ராணுவ முகாம்கள் மீது ஆயுத குழுவினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ முகாம்களையும் அந்த குழுவினர் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு அஞ்சிய மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் மிசோரம் மாநில பகுதியில் நுழைந்து தப்பினர். பின்னர் முறைப்படி மிசோரம் மாநில போலீசாரிடம் மியான்மர் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுவரை 75 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து உயிர் தப்பி இருக்கின்றனர்.
இந்தியாவுக்குள் நுழைந்த 75 மியான்மர் வீரர்களும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் மூலமாக பாதுகாப்பாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மியான்மர்- இந்தியா எல்லை பகுதியான மணிப்பூரின் மோரே எல்லையில் இந்த 75 ராணுவ வீரர்களும் அடுத்தடுத்து மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்தியாவுக்குள் தப்பி ஓடி வந்த மியான்மர் ராணுவத்தினரில் பலரும் மணிப்பூர், மிசோரம் எல்லைகளில் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இவர்களையும் தேடி கண்டுபிடித்து மியான்மருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மியான்மரில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் மிசோரமில் நுழைந்துள்ளனர். இந்த அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால் மியான்மரில் இருந்து வந்த அகதிகள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்; அகதிகளாக பாதுகாப்பு தருவோம் என்கிறது மிசோரம்.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதிதான் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. அன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications