கள்ளச் சாராயம் குடித்து 8 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மாவட்டமான மிட்னாபூரில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அவர்களுடன் மது அருந்திய 10க்கும் மேற்பட்டோர் எரிச்சாரயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications