ஆந்திராவில் தீபாவளியன்று பெரும் ரயில் விபத்து-8 பேர் பலி
விஜயநகரம்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பயணிகள் மீது ரயி்ல் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் போகாராவிற்கு ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்லாம் ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
இதனால் பயந்து போன பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் வேகமாக ரயிலிலிருந்து குதித்து கீழே இறங்கி ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த ராய்கர்-விஜயவாடா ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில் ரயிலில் சிக்கி 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. யார் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரப்பியது என்பது தெரியவில்லை.
இது சதியா அல்லது தீவிபத்து ஏற்பட்டதாக நம்பி கூறப்பட்ட செய்தியா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications