குடும்பத் தகராறு: ஜம்மு காஷ்மீரில் 8 வயது மகளின் தலையை துண்டித்துக் கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் குடும்பத் தகராறில் 8 வயது மகளின் தலையை துண்டித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தெஹ்சில் தாலுகாவில் உள்ள கரானா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். அவர் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜாகிர் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தனது 8 வயது மகள் மசரத் நாஸின் தலையை துண்டித்தார்.

தலை துண்டிக்கப்பட்ட சிறுமியின் உடல் வீட்டு வாசலில் கிடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுமியின் உடலை கைப்பற்றினர்.

மேலும் இந்த சம்பம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாகிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+