திருப்பதி: செம்மரம் வெட்ட வந்தததாக கூறி 84 தமிழர்கள் கைது - இரவில் விடுதலை
திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 84 தமிழர்களை அதிகாலையில் கைது செய்த ஆந்திரா போலீசார் இரவில் விடுதலை செய்தனர்.
திருப்பதி: ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 84 தமிழர்களை ஆந்திர போலீசார் அதிகாலையில் கைது செய்தனர். பிணைத்தொகை கட்டிய பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிகளவு செம்மரங்கள் காணப்படுகின்றன. இந்த செம்மரங்களை அப்பாவி தமிழர்கள் பலரை பண ஆசை காட்டி பயன்படுத்தி பலர் வெட்டி கடத்தி வருகின்றனர்.
அண்மையில் ஆந்திரமாநிலம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க எரியில் குதித்து உயிரிழந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

84 தமிழர்கள் கைது
ஆந்திரா போலீசாரே தமிழர்களை அடித்துக்கொன்று ஏரியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் வாகன சோதனையின்போது 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை
அவர்கள் 84 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை திருப்பதிக்கு கொண்டு சென்று செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கட்டட வேலை
84 பேரும் ஆந்திர பதிவெண் கொண்ட ஒரே லாரியில் விலங்குகளை போல் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கட்டட வேலை மற்றும் சமையல் வேலை செய்வதற்கு எனக் கூறி அழைத்து சென்றதாகவும் நல்ல சம்பளம் கொடுப்பதாக கூறியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

ஆந்திர போலீஸ் ஆலோசனை
கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தினர்.

ரேணிகுண்டா வட்டாட்சியர்
கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

84 பேரும் விடுதலை
வனப்பகுதியில் கைதானால் மட்டுமே செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்பதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரேணிகுண்டா தாசில்தாரிடம் பிணைத்தொகை செலுத்தி அனைவரும் விடுதலை பெற்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications