மத்திய அரசுப் பணியில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு மாற்றம்
மத்திய அரசுப் பணியில் பணியாற்றி வந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லி: மத்திய அரசுப்பணியில் இருந்து 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் இதுவரை பணியாற்றி வந்த இவர்கள் தற்போது மாநில அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாறு:
கடலூர் மாவட்ட உதவி ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சார் ஆட்சியராக தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர், திருப்பத்தூர் சார் ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சார் ஆட்சியாளராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் சார் ஆட்சியராக பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தாராபுரம் உதவி ஆட்சியராக கிரேஸ் லால்ரிந்திகி பச்சூ நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட உதவி ஆட்சியராக சரவண்குமார் ஜதாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் சார் ஆட்சியாளராக கிள்ளி சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.