90 வயதில் 2வது திருமணம் செய்ய பெண் தேடும் குஜராத்காரர்: காரணம் பிள்ளைகள்
அகமதாபாத்: குஜராத்தில் 90 வயது முதியவர் இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் மன்சுக்லால்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 90 வயதாகும் அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மன்சுக்லாலின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது மகள்களில் ஒருவரின் வீட்டில் மன்சுக்லால் வசித்து வருகிறார். வீட்டு வாடகையாக மகள் மாதாமாதம் ரூ.17 ஆயிரம் பணத்தை தந்தையிடம் இருந்து வாங்குகிறார்.
இது தவிர உணவுக்காக மகனுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கிறார் மன்சுக்லால். இந்நிலையில் அவர் தனது வாழ்வின் கடைசி காலத்தை புதிய வாழ்க்கைத் துணையுடன் நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் பிள்ளைகளுக்கு என் பணத்தின் மீது தான் கண். அதனால் என் கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications