ம.பி.யில் கொடூரம்.. 14 வயது சிறுமியை 2 நாள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஐவர்!
மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சிந்த்வாரா: மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அடுத்தடுத்து 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசும் நீதிமன்றங்களும் கடுமையான தண்டனைகளை விதித்து வருகின்றன.
இருப்பினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

சிறுமி கூட்டு பலாத்காரம்
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 24 மணி நேரத்தில் 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குன்டிபூரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 6ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

போலீஸில் புகார்
இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய சிறுமியின் பெற்றோர் மறுநாள் குன்டிபூரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மயங்கிய நிலையில் மீட்பு
இதையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் நீரஜ் சோனி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மஹுவா தோலா பகுதிய்ல சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தி சென்று பலாத்காரம்
சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் நடந்தது குறித்து விசாரித்தனர். அப்போது மோகித் பரத்வாஜ் என்ற 22 வயது இளைஞரும் ராகுல் போண்டே என்ற இளைஞரும் அவர்களது வீட்டிற்கு கடத்தி சென்று தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மறுநாள்தான் விட்டனர்
அன்றிரவு முழுவதும் தங்களின் வீட்டிலேயே அடைத்து வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும் மறுநாள்தான் தன்னை வெளியே செல்ல அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இழுத்துச்சென்று
மறுநாள் வெளியே வந்த அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பன்டி பாலவி(23) அங்கீத் ரகுவான்ஷி(25) அமித் விஷ்வகர்மா(21) ஆகிய மூன்று இளைஞர்களும் தன்னை மீண்டும் போண்டேவின் வீட்டிற்கு இழுத்து சென்று மாறி மாறி பலாத்காரம் செய்தனர் என்றும் அந்த சிறுமி கதறியுள்ர்.

போஸ்கோ சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்ட போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கூட்டு பலாத்காரம், குற்றம்சார்ந்த அச்சுறுத்தல், கடத்தல், தவறான நோக்கத்துக்காக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications