வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கத்திமுனையில் பெண் கூட்டு பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக்
வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
தக்ஷின கன்னட பகுதியைச் சேர்ந்த 27 வயது திருமணமான பெண் ஒருவர் தனக்கு தெரிந்த மஞ்சு என்பவர் மூலம் வேலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மஞ்சு அந்த பெண்ணுக்கு போன் செய்து பொருத்தமான வேலை ஒன்று இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் புறப்பட்டு பெங்களூருக்கு வந்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி..
அதிகாலை ஜலஹள்ளி வந்த அந்தப்பெண் மஞ்சுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் தனது நண்பருடன் அங்கு வந்த மஞ்சு, அந்தப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். போகும் வழியில் மேலும் 2 பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் கேட்டபோது வேலை விஷயமாக உதவ வந்துள்ளார்கள் என கூறியுள்ளனர்.

4 பேர் கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற 4 பேரும், அவரை குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து வந்த அவர்கள், அந்தப் பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

கழிவரையில் பூட்டிவிட்டு தப்பிய பெண்
மாலை 5.30 மணிவரை அந்தப் பெண்ணை அவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு 3 பேர் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்த காவலுக்கு இருந்த நபரை கழிவறையில் அடைத்து வைத்த அந்தப் பெண் தப்பியுள்ளார்.

போலீசார் வலைவீச்சு
இதையடுத்து ஹொரமாவு பகுதி ஆஸ்ரமத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்த அந்தப் பெண், பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு தனது சொந்த ஊருக்கு செல்ல இருந்த அந்தப் பெண் நடந்த கொடுமைகளையெல்லாம் எண்ணி குற்றவாளிகளுககு தண்டனை வாங்கித்தர முடிவு செய்தார். அதன்படி நடந்தவற்றை கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications