Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கத்திமுனையில் பெண் கூட்டு பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக்

வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

தக்ஷின கன்னட பகுதியைச் சேர்ந்த 27 வயது திருமணமான பெண் ஒருவர் தனக்கு தெரிந்த மஞ்சு என்பவர் மூலம் வேலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மஞ்சு அந்த பெண்ணுக்கு போன் செய்து பொருத்தமான வேலை ஒன்று இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் புறப்பட்டு பெங்களூருக்கு வந்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி..

வேலை வாங்கித் தருவதாக கூறி..

அதிகாலை ஜலஹள்ளி வந்த அந்தப்பெண் மஞ்சுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் தனது நண்பருடன் அங்கு வந்த மஞ்சு, அந்தப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். போகும் வழியில் மேலும் 2 பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் கேட்டபோது வேலை விஷயமாக உதவ வந்துள்ளார்கள் என கூறியுள்ளனர்.

4 பேர் கூட்டு பலாத்காரம்

4 பேர் கூட்டு பலாத்காரம்

இதையடுத்து அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற 4 பேரும், அவரை குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து வந்த அவர்கள், அந்தப் பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

கழிவரையில் பூட்டிவிட்டு தப்பிய பெண்

கழிவரையில் பூட்டிவிட்டு தப்பிய பெண்

மாலை 5.30 மணிவரை அந்தப் பெண்ணை அவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு 3 பேர் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்த காவலுக்கு இருந்த நபரை கழிவறையில் அடைத்து வைத்த அந்தப் பெண் தப்பியுள்ளார்.

போலீசார் வலைவீச்சு

போலீசார் வலைவீச்சு

இதையடுத்து ஹொரமாவு பகுதி ஆஸ்ரமத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்த அந்தப் பெண், பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு தனது சொந்த ஊருக்கு செல்ல இருந்த அந்தப் பெண் நடந்த கொடுமைகளையெல்லாம் எண்ணி குற்றவாளிகளுககு தண்டனை வாங்கித்தர முடிவு செய்தார். அதன்படி நடந்தவற்றை கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+