ஆறுமாதமாக பாலியல் தொல்லை... மூன்று வயது சிறுமிக்கு பள்ளி நிறுவனர் செய்த கொடுமை
மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்.
Recommended Video

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். ஆறுமாதமாக அந்த சிறுமிக்கு அந்த நிறுவனர் பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தெரிய வந்து இருக்கிறது.
இந்த கொடூரமான சம்பவத்தில் தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த ஆறுமாதமாக நடந்த வந்த இந்த விசாரணையில் தற்போதுதான் விடை கிடைத்து இருக்கிறது. பள்ளியின் நிறுவனரே இப்படி ஒரு காரியத்தை செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் தொல்லை
மும்பையின் அந்தேரி என்ற பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்தார் அந்த 3 வயது சிறுமி. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் அவளுக்கு சரியாகமல் இருந்து இருக்கிறது. இதையடுத்து சந்தேகம் அடைந்து அவளது பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அதில் அவளுக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்து தெரிய வந்து இருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் போலீசுக்கு புகார் அளித்து இருக்கின்றனர்.

நிறுவனர் செய்த குற்றம்
முதலில் போலீஸ் நேரடியாக விசாரணை செய்யாமல் பள்ளி இணையதளத்தில் இருக்கும் புகைப்படங்களை கட்டி விசாரித்து இருக்கின்றனர். அதன்பின் பள்ளியில் வேலை செய்யும் 75 பேரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து பள்ளியின் நிறுவனர்களில் ஒருவர் மீது சந்தேகம் வரவே அவரது புகைப்படத்தை காட்டி அந்த சிறுமியிடம் விசாரணை செய்து உள்ளனர். கடைசியில் பள்ளியின் நிறுவனர்தான் இந்த குற்றத்தை செய்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறுமாதமாக நடந்தது
57 வயது நிரம்பிய அந்த பள்ளியின் நிறுவனர் அதன்பின் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் அவர் கடந்த வருடம் டிசம்பரில் இருந்து இந்த வருடம் மே மாதம் வரை 6 மாதம் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டார். மேலும் நிறைய முறை பள்ளியில் அந்த சிறுமியை இவர் அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் நடந்து இருக்கிறது.

ஆசிரியரும் உடந்தை
இந்த நிலையில் தற்போது பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அந்த ஆசிரியர்தான் இந்த சிறுமியை அழைத்து சென்று நிறுவனரிடம் விட்டு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த ஆசிரியரும் இந்த சிறுமியை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் இருக்கின்றனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications