ஆறுமாதமாக பாலியல் தொல்லை... மூன்று வயது சிறுமிக்கு பள்ளி நிறுவனர் செய்த கொடுமை
மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்.
Recommended Video

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். ஆறுமாதமாக அந்த சிறுமிக்கு அந்த நிறுவனர் பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தெரிய வந்து இருக்கிறது.
இந்த கொடூரமான சம்பவத்தில் தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த ஆறுமாதமாக நடந்த வந்த இந்த விசாரணையில் தற்போதுதான் விடை கிடைத்து இருக்கிறது. பள்ளியின் நிறுவனரே இப்படி ஒரு காரியத்தை செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் தொல்லை
மும்பையின் அந்தேரி என்ற பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்தார் அந்த 3 வயது சிறுமி. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் அவளுக்கு சரியாகமல் இருந்து இருக்கிறது. இதையடுத்து சந்தேகம் அடைந்து அவளது பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அதில் அவளுக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்து தெரிய வந்து இருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் போலீசுக்கு புகார் அளித்து இருக்கின்றனர்.

நிறுவனர் செய்த குற்றம்
முதலில் போலீஸ் நேரடியாக விசாரணை செய்யாமல் பள்ளி இணையதளத்தில் இருக்கும் புகைப்படங்களை கட்டி விசாரித்து இருக்கின்றனர். அதன்பின் பள்ளியில் வேலை செய்யும் 75 பேரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து பள்ளியின் நிறுவனர்களில் ஒருவர் மீது சந்தேகம் வரவே அவரது புகைப்படத்தை காட்டி அந்த சிறுமியிடம் விசாரணை செய்து உள்ளனர். கடைசியில் பள்ளியின் நிறுவனர்தான் இந்த குற்றத்தை செய்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறுமாதமாக நடந்தது
57 வயது நிரம்பிய அந்த பள்ளியின் நிறுவனர் அதன்பின் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் அவர் கடந்த வருடம் டிசம்பரில் இருந்து இந்த வருடம் மே மாதம் வரை 6 மாதம் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டார். மேலும் நிறைய முறை பள்ளியில் அந்த சிறுமியை இவர் அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் நடந்து இருக்கிறது.

ஆசிரியரும் உடந்தை
இந்த நிலையில் தற்போது பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அந்த ஆசிரியர்தான் இந்த சிறுமியை அழைத்து சென்று நிறுவனரிடம் விட்டு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த ஆசிரியரும் இந்த சிறுமியை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் இருக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications