120 சாட்டிலைட்.. ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்க முடிவு.. பெங்களூர் நிறுவனத்தின் மாஸ் பிளான்!
ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்கப்படும் வசதியை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியா முழுக்க செயல்படுத்த இருக்கிறது.
பெங்களூர்: ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்கப்படும் வசதியை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியா முழுக்க செயல்படுத்த இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த ஆஸ்ட்ரோம் என்ற நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அடுத்த வருடம் விண்வெளிக்கு சில சாட்டிலைட்டுகளை அனுப்ப உள்ளது.
இதன் மூலம் ஆகாயத்தில் இருந்து நேரடியாக நமக்கு இணைய வசதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா முழுக்க இதன் மூலம் எளிதாக இணைக்கப்படும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

இப்போது எப்படி
இப்போதும் நாம் ஆகாயம் மூலமே இணைய வசதியை பெறுகிறோம். ஆனால் ஆகாயத்தில் உள்ள சாட்டிலைட் மூலம் சிக்னல்கள் குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்களில் டவர்களுக்கு அனுப்பப்பட்டு பின் நம்முடைய மொபைல்களுக்கு வரும். இல்லையென்றால் பிராட்பேண்ட் வசதி மூலம் வீட்டு கணினிகளுக்கு வயர்கள் மூலம் இணைய வசதி அளிக்கப்படுகிறது.

என்ன வசதி
இந்த நிலையில் நேரடியாக ஆகாயத்தில் இருந்து நம்முடைய மொபைல்களுக்கு இணைய வசதி அளித்தால் எப்படி இருக்கும். அதாவது வீட்டில் டிடிஎச் வைத்து இருப்பது போல. கேபிள் நிறுவனங்களை நம்பாமல் வீட்டில் நாமே ஆன்டெனா வைத்து இருக்கிறோம். அதை வைத்து நமக்கு சாட்டிலைட் மூலம் நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கிடைக்கிறது. இதேபோல் போன் பயன்படுத்துவது நடந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் செய்ய போகிறார்கள்.

எப்படி இயங்கும்
இந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் மூலம் நேரடியாக ஆகாயத்தில் இருந்து நம்முடைய போன்களுக்கு இணைய வசதி அளிக்கப்படும். அதாவது இடையில் எந்த நிறுவனத்தின் இடையூறும் இல்லாமல், நேரடியாக வலுவான சிக்னல்கள் நமக்கு அளிக்கப்படும். இதன் மூலம் இணையம் மிகவும் வேகமாக இருக்கும். வீட்டில் இந்த சிக்னல்களை பெற ஆன்டெனா ஒன்று வைத்து வீட்டில் உள்ள வைஃபை உள்ள பொருட்களையும் இணையத்தில் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது அளவில்லாத இன்டெர்நெட்!

என்ன செய்ய போகிறார்கள்
இந்த வசதியை உருவாக்கி கொடுக்க அதிக நாட்கள் எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்று ஆஸ்ட்ரோம் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆம், அடுத்த வருடம் ஜூலை வரை காத்திருந்தால் போதும். அதற்குள் 25 சாட்டிலைட்டுகளை அனுப்ப இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 2020க்குள் 125 சாட்டிலைட்டுகளை அனுப்ப இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க ஒரே வேகத்தில் இணையம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்படும்.

மாற்றம் ஏற்படும்
இதனால் தற்போது இந்திய இணைய உலகத்தில் ஜியோ ஏற்படுத்தி இருக்கும் மாற்றமே மொத்தமாக காலி ஆகி விடும். ஆம் இப்போதே நமக்கு குறைந்த விலையில் அதிக அளவில் இணையம் வழங்கப்படுகிறது. ஜியோ வந்த பின் நிறைய சலுகைகள் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் வந்த பின் அதைவிட அதிக சலுகையும், சுதந்திரமும், வேகமும் கிடைக்கும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இதை எல்லாம் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று நினைத்தால், நீங்கள் சரியாக கணித்து விட்டீர்கள். அமெரிக்காவின் பிரபல விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இதேபோல ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். அதாவது உலகம் மொத்தமும் ஒரே வேகத்தில் ஒரே மாதிரி இணையம் வழங்க பல நூறு சாட்டிலைட்டுகளை அனுப்ப உள்ளதாக அவர் கூறினார். அதில் இந்தியாவும் அடக்கம். இந்த இரண்டில் ஏதோ திட்டம் விரைவில் செயலுக்கு வரும் என்று கூறலாம்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications