குஜராத்தில் பெருகும் கள்ள நோட்டு புழக்கம் - அகமதாபாத்தில் கும்பல் சுற்றி வளைத்து கைது
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அகமதாபாத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் ஏற்படும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை கைது செய்தனர் போலீசார்.

அவர்களிடம் இருந்து கட்டுக் கட்டாக கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளளர்.
முன்னதாக நாட்டில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சத்தீஷ்கர் மாநிலமும் தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications