Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்!

டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார்.

இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.

 பச்சைக் குத்தும் தொழில்

பச்சைக் குத்தும் தொழில்

டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய ஹாபி என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

 எங்கும் பச்சை

எங்கும் பச்சை

தன்னுடைய பதினாறு வயதில் பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கிய கரண் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். உடலில் எத்தனை பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பச்சைக் குத்துவதோட நிற்காமல் உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.

 கருவிழி இல்லை பச்சை விழி

கருவிழி இல்லை பச்சை விழி

உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார் இவர். தற்போது அந்தப் புகைப்படங்களை நெட்டில் ஏற்றியுள்ளார்.

 கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம்

கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம்

கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று இவர் குறிப்பிடுகிறார். ''வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்'' என்று கூறியுள்ளார். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

 ஆன்லைனில் வைரல் ஆனார்

ஆன்லைனில் வைரல் ஆனார்

இவர் கண்களில் பச்சைக் குத்தியபின் அந்தப் புகைப்படங்களை ஆன்லைனில் ஏற்றியுள்ளார். இன்ஸ்ட்டாகிராமிலும், பல சமூக வலைதள பக்கங்களிலும் இந்தப் புகைப்படம் சிறிது நேரத்திலேயே வைரல் ஆனது. யாருக்கும் தெரியாமல் இருந்த இவரது பச்சைக் குத்தும் கடை ஒரே நாளில் டெல்லியில் பேமஸ் ஆனது. மேலும் இந்தியாவிலேயே முதலில் கண்களில் பச்சை குத்திய நபர் இவர்தான் என்கிறார் பெருமையாக.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+