கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்!
டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
டெல்லி : டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார்.
இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.

பச்சைக் குத்தும் தொழில்
டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய ஹாபி என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

எங்கும் பச்சை
தன்னுடைய பதினாறு வயதில் பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கிய கரண் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். உடலில் எத்தனை பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பச்சைக் குத்துவதோட நிற்காமல் உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.

கருவிழி இல்லை பச்சை விழி
உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார் இவர். தற்போது அந்தப் புகைப்படங்களை நெட்டில் ஏற்றியுள்ளார்.

கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம்
கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று இவர் குறிப்பிடுகிறார். ''வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்'' என்று கூறியுள்ளார். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

ஆன்லைனில் வைரல் ஆனார்
இவர் கண்களில் பச்சைக் குத்தியபின் அந்தப் புகைப்படங்களை ஆன்லைனில் ஏற்றியுள்ளார். இன்ஸ்ட்டாகிராமிலும், பல சமூக வலைதள பக்கங்களிலும் இந்தப் புகைப்படம் சிறிது நேரத்திலேயே வைரல் ஆனது. யாருக்கும் தெரியாமல் இருந்த இவரது பச்சைக் குத்தும் கடை ஒரே நாளில் டெல்லியில் பேமஸ் ஆனது. மேலும் இந்தியாவிலேயே முதலில் கண்களில் பச்சை குத்திய நபர் இவர்தான் என்கிறார் பெருமையாக.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications