திடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது?
லடாக்: வானத்தில் திடீர் என்று நட்சத்திரம் ஒன்று மாயமாக மறைந்த சம்பவம் வானியல் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
வானத்தில் லட்சம் கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், சூரியன்களும் இருக்கிறது. இதில் அவ்வப்போது ஆச்சர்யங்கள், நினைத்து பார்க்க முடியாத மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும்.
இந்த நிலையில்தான் தற்போது வானத்தில் புதிய ஆச்சர்யம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு பெரிய ராட்சச நட்சத்திரம் ஒன்று மொத்தமாக மறைந்து காணாமல் போய் உள்ளது.

என்ன நடந்தது?
பூமியில் இருந்து 75 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் கின்மான் டிவார்ப் கேலக்சி என்ற இடத்தில் இந்த நட்சத்திரம் இருந்துள்ளது. இந்த நட்சத்திரத்தை பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பாவின் தொலைநோக்கியான யுரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி டெலிஸ்கோப் (European Southern Observatory's Very Large Telescope) சோதனை செய்து வந்தது.

சோதனை செய்தது
இந்த சோதனை நடந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது அந்த நட்சத்திரம் மொத்தமாக மாயமாக மறைந்து உள்ளது. சோதனை செய்து கொண்டு இருக்கும் போதே திடீர் என்று அந்த நட்சத்திரம் மாயமாகி மறைந்து உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருந்ததாகவும், அழியும் நிலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆனாலும் மாயம்
ஆனாலும் இந்த நட்சத்திரம் மொத்தமாக மாயமாக மறைந்து உள்ளது. இது பல கேள்விகளை சந்தேங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த நட்சத்திரம் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதாவது மொத்தமாக பொலிவிழந்து, செயல் இழந்து இருக்கலாம். அதனால் காணாமல் போய் இருக்கலாம் என்கிறார்கள்.
Recommended Video

தொடர்ந்து
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அந்த கின்மான் டிவார்ப் கேலக்சி பகுதியில் அடுத்தடுத்து நிறைய நட்சத்திரங்கள் இப்படி காணாமல் போகிறது. வரிசையாக நிறைய நட்சத்திரங்கள் அங்கு செயல் இழக்கிறது. இதனால் அந்த கின்மான் டிவார்ப் கேலக்சியின் ஆயுள் முடிவிற்கு வருகிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாட்டின் வானியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications