ஊரில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் நீங்கள்தான்.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. ஹரியானாவில் கொடூரம்
ஹரியானாவில் ஒரு முஸ்லீம் குடும்பம் சிலரால் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சண்டிகர்: இந்துத்துவா அரசியலுக்கு எதிராக பேசும் மக்களை நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேறும்படி கடந்த சில மாதங்களாக சிலர் கூறினார்கள். பொதுவாக பிரபலங்கள் பலர் இப்படி தாக்கப்பட்டார்கள்.
சமீப காலமாக இது கொஞ்சம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் ஒரு முஸ்லீம் குடும்பம் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
ஹரியானாவில் இருக்கும் அந்த குடும்பம் அங்கு இருக்கும் சிலரால் துன்புறத்தப்படுகிறது. அவர்களை பாகிஸ்தான் செல்ல சொல்லி அவர்கள் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

300 வருடம்
ஹரியானா அருகில் ஜோஷி என்ற ஜாட் இன மக்களின் கிராமத்தில் சுரேஷ் அல்வி என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. 300 ஆண்டுகளாக அந்த முஸ்லீம் குடும்பம் அங்கு வசித்து வருகிறது. அந்த கிராமத்தில் முதலில் குடியேறியது அவர்களின் முன்னோர்கள் என்று கூறப்படுகிறது.

முஸ்லிம் குடும்பம்
அவர்கள் முதலில் குடியேறிய பின் அங்கு நிறைய முஸ்லீம் குடும்பம் குடியேறி இருக்கிறது. ஆனால் சுதந்திரத்திற்கு பின் அங்கு ஜாட் இன மக்கள் குடியேற தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அங்கு இருக்கும் ஒரே முஸ்லீம் குடும்பம் சுரேஷ் அல்வியுடையது மட்டுமே.

பாகிஸ்தான் போ
இதனால் அந்த குடும்பம் தற்போது மிரட்டப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் இந்துத்துவா செயற்பாட்டாளர் ஜெய்வீர் என்பவர் அந்த குடும்பத்தை பாகிஸ்தான் செல்ல சொல்லி இருக்கிறார். அவருடன் இன்னும் சிலரும் வந்து மிரட்டியுள்ளனர். இல்லையென்றால் அந்த வீட்டை கொளுத்திவிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

போலீஸ்
தற்போது போலீஸ் அவர்களை கைது செய்து இருக்கிறது. இனி இது போன்ற சம்பவம் நடக்காது என போலீஸ் வாக்குறுதி கொடுத்து இருக்கிறது. மேலும் அந்த குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications