டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம்.. நிர்பயாக்களின் நிலைமை மாறாதோ?!
டெல்லி: தலைநகரில் கடந்த ஞாயிரன்று ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
டெல்லியில் ஒன்பதுவயது சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் நண்பர்களுடன் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது 25வயது மதிக்கத்த அடையாளம் தெரியாத மனிதன் மிட்டாயை காட்டி கவர முற்பட்டுள்ளான்.நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடிய நிலையில் இச்சிறுமி மட்டும் தனியாக மாட்டிக் கொண்டதால் அவளை அவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான்.அவளது வீட்டினருகேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தப்பி ஒடிய கோபி நிசா மில்லா என்ற அக்குற்றவாளி திங்கள் அன்று கைது செய்யப்பட்டான்.பாதிக்கப்பட்ட அச்சிறுமி பாரா ஹிந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த கயவனுக்கு உலகிலேயே மிக கொடிய தண்டனையை அளிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
குற்றவாளி மல்லாவை பாலியல் வன்முறை தடுப்புச்சட்டதில் காவல்துறை கைது செய்துள்ளது.திடுக்கிட வைக்கும் இச்சம்பவம் நிர்ப்பயா வழக்கை போலவே பெண்களுக்கான பாதுக்காப்பு பற்றிய கேள்விக்குறியை பலமாக எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications