வாயில் மது ஊற்றி பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்.... டெல்லியில் பயங்கரம்!
சிறுமியை உடன் படிக்கும் மாணவர்களே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களை கவுன்சிலிங்க்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : உத்தம் நகரை சேர்ந்த பள்ளி மாணவியை உடன்படிக்கும மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தம் நகரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக புதன் கிழமை காலை சென்றுள்ளார். பார்ட்டி முடிந்ததும் பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் தடுத்துள்ளனர்.

பின்னர் வலுக்கட்டாயமாக மாணவியின் வாயில் மதுவை ஊற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் 2 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மைனர் என்பதால் உரிய கவுன்சிலிங் அளிக்க நீதிபதி ஆணையிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கவுன்சிலிங்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications