Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க நடக்குது? அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.6 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

நிக்கோபார்: அந்தமான் - நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது: மக்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகி உள்ளது.

இதோடு கணக்கிட்டால் நேற்று பிற்பகலில் இருந்து 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்கள் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்பெல் பேவில் இருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

A series of 6 earthquakes attack in Andaman Nicobar Islands: 4.6 magnitudes hit early in the morning

இதற்கு முன் நேற்று பிற்பகலில் இருந்து 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் அதிக வலுவான நிலநடுக்கம் ஆகும். இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஒன்றரை மணி நேர இடைவெளியில் இரண்டரை மணிக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்கம்: உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பின்னர் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

A series of 6 earthquakes attack in Andaman Nicobar Islands: 4.6 magnitudes hit early in the morning

டாங்கோவில் 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் சிறிய அளவில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துருக்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர். துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் கடந்த தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது.மாயபண்டர் பகுதியில் இருந்து 67 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+