பாடிக்கொண்டிருக்கும்போதே பிரிந்த உயிர்! மைக்கை பிடித்தபடி சரிந்த பெண்.. திடீர் மாரடைப்பால் சோகம்
காந்திநகர்: குஜராத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக இளம் வயதினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரை பலர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் பாகத்தில் மிக முக்கியமானது இதயம். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வது இதயம்தான். ஆனால், இதயத்தின் பணிக்கு கொழுப்பு தடையை ஏற்படுத்துகிறது.

மாறிவரும் வேலை சூழல், அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளப்பட்ட வாழ்க்கை சூழல், உணவு பழக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடலில் கொழுப்புகளை அதிக அளவில் தேக்கமடைய செய்கின்றன. இந்த கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நரம்புகளில் தேக்கமடையும்போது, ரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கிறது. ரத்தம் சீராக செல்லப்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. அதாவது, உடலின் மற்ற பாகங்களிலிருந்து இதயத்திற்கு வரும் ரத்தத்தை கொழுப்பு அடைத்துக்கொள்கிறது.
வழக்கமாக மாரடைப்பு வரும்போது கடுமையான வலி, வாந்தி, கை செயல்படாமல் இருத்தல், அதிக வியர்வை போன்றவை ஏற்படுகின்றன. ஆனால், சமீபத்திய மாரடைப்பு செய்திகளில் இந்த அறிகுறிகளை பார்க்க முடிவதில்லை. குஜராத்திலும் இப்படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று பெண் ஒருவர் நிகழ்ச்சியில் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இப்படியான சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு அதீத உடல் செயல்பாடும், மன அழுத்தமும் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் மரபணு குறைபாடும் இந்த வகை மாரடைப்புக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சைலன்ட் ஹார்ட் அட்டாக் பெண்களை விட, ஆண்களுக்கு தான் அதிகமாக வருகிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், குடும்ப சூழல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் பெண்களை அதிகமாக பாதிக்கிறது. எனவே பெண்களும் இந்த சைலன்ட் மாரடைப்புக்கு இறையாகின்றனர்.
இது குறித்து விளக்கும் மருத்துவர்கள், கார்டியாக் அரஸ்ட் எனப்படும் இதய செயலிழப்பு, ஹார்ட் அடடாக்குடன் பொதுவாக ஒப்பிட்டு பேசப்படுகிறது. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. கார்டியாக் அரஸ்ட் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நிகழும். இது ஏற்படும்போது நெஞ்சுவலி, வியர்த்தல், கை செயலிழப்பு, வாந்தி என எதுவும் ஏற்படாது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை எனில், சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிடுவார்.
கரோனரி தமனி நோய், கார்டியோமயோபதி, ப்ருகாடா சிண்ட்ரோம், மார்பன் சிண்ட்ரோம், இதய பிறப்பு குறைபாடுகள் போன்றவை இந்த திடீர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications