மானிய சிலிண்டர் பெற இனி ஆதார் அட்டை அவசியமில்லை: வீரப்ப மொய்லி

சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால், நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியத்தை பெற முடியாது என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது.
இதனால் பயனாளிகளிடையே கடும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டது. ஏனெனில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இன்னும் ஆதார் அட்டை பெறாத லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆதார் திட்டம் மூலமான மானியத் திட்டம் திறம்பட அமலாக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் மொய்லி கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications