ஆதார் இருந்தால் திருப்பதி ஏழுமலையானை ஈஸியா 1 மணிநேரத்தில் பார்க்கலாம் ...
ஆதார் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

திருமலை: திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் ஆதார் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் வரப்பிரசாதி. ஏழுமலையானை தரிசனம் செய்தார் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்காரணமாகவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க நேரிடுகிறது. அதே போல 300 ரூபாய் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 3 முதல் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

ஆதார் எண் மூலம் தரிசனம்
திருப்பதியில் கூட்டத்திற்கு ஏற்ப இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும்வகையில் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பக்தர்களின் ஆதார் எண் மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசன அனுமதி அட்டை
இதற்கான சோதனை ஓட்டத்தை இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நேற்று தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டம் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதற்காக திருமலையில் 14 இடங்களில் 117 கவுண்டர்களில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இப்பணியில் 80 மூத்த அதிகாரிகள், 425 பணியாளர்கள் 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் ஆக பணியில் ஈடுபடுகின்றனர்.

பக்தர்களுக்கு புதிய வசதி
இதை பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தில் ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய முடியாத வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1 மணிநேரத்தில் தரிசனம்
பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் அட்டை அவசியம். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் நாள்கணக்கில் காத்திருக்கும் நேரம் குறையும். இந்த நடவடிக்கை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழுவதுமாக அமலுக்கு வரும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பழைய முறையும் உண்டு
ஆதார் அட்டை கொண்டு வராதவர்கள் வழக்கம் போல வைகுண்டம் க்யூ காம்ளக்ஸ் மூலம் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை. திருமலை போல திருப்பதியிலும் கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுநாள் வரை விஐபி தரிசனத்திற்கும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கும் ஆதார் கார்டு அவசியமானதாக இருந்தது. இப்போது இலவச தரிசனத்திற்கும் ஆதார் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications