வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி
Recommended Video

டெல்லி : வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு அறிவித்துள்ளது.
அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வங்கி சேவைகளுக்கு தற்போது ஆதார் எண் அவசியம் இல்லை. வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைத் தரத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.
அது போல் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது என்றும் நீதிபதி ஏ.கே சிக்ரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications