For Daily Alerts
Just In
ரேபேலி தொகுதி: சோனியாவை எதிர்த்த ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுவதாக இருந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன், திடீரென தான் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ரேபேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற பக்ருதீன் களமிறக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று தக்க காரணங்களைத் தெரிவிக்காமல் தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக பக்ருதீன் அறிவித்துள்ளார்.
பக்ருதீன் விலகலைத் தொடர்ந்து அத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அர்ச்சனா ஸ்ரீவத்சவா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
lok sabha election 2014 rae bareli congress sonia aap sim card லோக்சபா தேர்தல் 2014 காங்கிரஸ் சோனியா ஆம் ஆத்மி வேட்பாளர் விலகல்
English summary
The AAP suffered a jolt on Tuesday with its candidate Justice (retd.) Fakhruddin withdrawing from the electoral fray in Rae Bareli Lok Sabha constituency where Congress president Sonia Gandhi is a candidate.
Story first published: Tuesday, April 8, 2014, 13:24 [IST]