பிரபாகரனை முதன்முதலில் பேட்டி எடுத்த அனிதா பிரதாப் எர்ணாகுளம் தொகுதியில் போட்டி!!
எர்ணாகுளம்: லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போர்களங்களைப் பதிவு செய்த மூத்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போட்டியிடுகிறார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில் பத்திரிகை துறையில் கோலோச்சியவர் அனிதா பிரதாப். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அருண் ஷோரி ஆசிரியராக இருந்த போது பணிக்கு சேர்ந்தார். பின்னர் சிறிது காலம் "சண்டே" பத்திரிகையில் பணியாற்றினார்.

அப்போதுதான் 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் முதலாவது பேட்டி வெளியானது. அந்தப் பேட்டியை எடுத்தவர் அனிதா பிரதாப். இதன் மூலமாக சர்வதேச நாடுகளின் கவனத்தையும் பெற்றார் அனிதா பிரதாப்.
அதன் பின்னர் இந்தியா டுடேவில் சிறிது காலம் பணியாற்றிய அனிதா பிரதாப், டைம் பத்திரிகைக்காக 8 ஆண்டுகாலம் செய்தியாளராக பணியாற்றினார். அதன் பிறகு சி.என்.என். தொலைக்காட்சியில் இணைந்தார். அட்லாண்டா மற்றும் பாங்காங்கில் அவர் பணிபுரிந்தார்.
ஊடகத்துறையில் சிறப்பாக துணிச்சலாக பணியாற்றியதற்காக பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள அனிதா பிரதாப், இந்தியாவுக்கான நார்வே தூதராக இருந்த ஆர்னே ராய் வால்த்தரை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது ஜப்பானுக்கான நார்வே தூதராக பணிபுரிந்து வருகிறார்.
அனிதா பிரதாப்பின் ஈழம், ஆப்கானிஸ்தான் போர்க்களங்கள் பற்றிய புத்தகம் பலரது பாராட்டையும் பெற்றது. அவர் தற்போது நாடு திரும்பி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
அத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். தாம் ஆம் ஆத்மி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள கள நிலவரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் தெரிவிப்பேன் என்கிறார்.
அனிதா பிரதாப் போட்டியிடும் எர்ணாகுளம் தொகுதியில் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸும் அவரை எதிர்த்து அவரது நெருங்கிய நண்பரான மார்க்சிஸ்ட் கட்சியின் கிறிஸ்டி பெர்னாண்டசும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த பெருந்தலைகளுடன் மோதி அனிதா பிரதாப் வெல்வாரா?
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications