ஆம் ஆத்மி நாட்டில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும்: பிரசாந்த் பூஷன்

Subscribe to Oneindia Tamil

AAP to lead the country to fundamental change, says Prashant Bhushan
திருவனந்தபுரம்: கட்சி தொடங்கியே சிறிது காலத்திலேயே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது வரலாறு எனப் பாராட்டியுள்ள அக்கட்சியின் முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன், பொது மக்களிடம் உண்மையான ஜனநாயகத்தையும், நியாயமான சட்ட உரிமைகளையும் மாற்றுவதே அக்கட்சியின் முக்கிய பணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற வழக்கறிஞர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பிரசாந்த் பூஷன். நிகழ்ச்சியில் பூஷனுக்கு கேரள வழக்கறிஞர் சங்கம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூஷன் பேசியதாவது :-

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றைய நாளில் நாட்டில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும் பணியை இனிதே துவக்கி உள்ளது ஆம் ஆத்மி.

உச்சநீதிமன்றம் உள்பட நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களும் தங்களது கடமைகளை முறையாக செய்யவில்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக எந்த வித அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இனி இந்த விவகாரகங்களில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மக்களின் நாடியை தெரிந்துகொண்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கேற்ப எங்கள் கட்சி நடந்துகொள்ளும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+