திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த புகார்- ஆம் ஆத்மி தலைவர் 'ராமன்' கைது!
டெல்லி: வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராமன் சுவாமி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்குள்ள மகளிர் காவல் நிலைய காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப் பட்டது.
அந்தப் புகாரையொட்டி, கைதுசெய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராமன் சுவாமியை நேற்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 8-ம் தேதி வரை ராமன் சிங்கை நீதிமன்றக்காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன் நண்பராக பழகிய ராமன் சுவாமியிடம் அந்த பெண் வேலை வாங்கி கொடுத்து உதவிடுமாறு வேண்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஓக்லா நகருக்கு வரச்சொன்ன ராமன் சுவாமி, அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு பயந்த அந்த பெண், பின்னர் தைரியப்படுத்திக்கொண்டு தற்போது புகார் அளித்துள்ளார். அவரது மருத்துவ அறிக்கையும் பாலியல் பலாத்காரம் நடந்தை உறுதிபடுத்தியுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications