பாஜகவுக்கு 'நிபந்தனை' யோடு கூடிய ஆதரவு: வாய்திறந்த பிரசாந்த் பூஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க, பிரச்சினைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி ஆதரவு தருவதற்கு பரிசீலிப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"டிசம்பர் 29-ல் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது மற்றும் டெல்லியில் ஜன சபை (பொது இடத்தில் பேரவைக் கூட்டம்) அமைப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால், பாஜகவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி பரிசீலிக்கக் கூடும்.

இது தன்னுடைய சொந்தக் கருத்து. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் இன்னும் விவாதிக்கவில்லை.

AAP may extend issue-based support to BJP, says Prashant

இவ்வாறு தனது பேட்டியில் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரசாந்த் பூசன் தெரிவித்துள்ள கருத்தும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.

ஆம் ஆத்மிக்கு ஆதரவு

இந்நிலையில், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி, எவ்வித நிபந்தனையும் இன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுயேட்சையின் ஆதரவு

ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவின்றி ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. டெல்லி தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள ராம்பீர் கூறுகையில், 'நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் பாஜகவுக்கு ஆதரவு தரத் தயார்' என நிபந்தனை விதித்துள்ளார்.

பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட இவரது ஆதரவை வைத்து பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது.

கிரண்பேடி கோரிக்கை

இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கைகோர்க்க பாஜக முன்வர வேண்டும் என கிரண் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைய வேறு சில வாய்ப்புகளும் உள்ளன. காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு தராவிட்டாலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது, இவ்விரு கட்சிகளும் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மறைமுகமாக ஆதரவு கிடைக்கும்.

ஆனால் மீண்டும் தேர்தலை சந்தித்து முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கலாம் என பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் விரும்புவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+