துடைப்பமும் கையுமாக டெல்லியில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றும் ஆம் ஆத்மி அமைச்சர்கள்
டெல்லி: டெல்லியில் முனிசிபால் கார்பரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சுத்தம் செய்து வருகிறார்கள்.
ஒழுங்கான ஊதியம் அளிக்குமாறு கோரி டெல்லி முனிசிபால் கார்பரேஷன் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று 5வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தலைமையிலான கார்பரேஷன் ஆட்களை பாஜக தான் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வைத்துள்ளதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
{ventuno}
சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று காலை துடைப்பங்களுடன் சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.
குப்பையை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் ஈடுபடுகிறார்கள். கார்பரேஷன் ஆட்களுக்கு சம்பளம் அளிக்க டெல்லி அரசு பணம் அளிக்கவில்லை என்கிறது பாஜக. ஆனால் பணம் கொடுத்தும் அதை பாஜக கார்பரேஷன் ஊழியர்களுக்கு அளிக்கவில்லை என்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து டெல்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஷ்ரா கூறுகையில்,
முதல்வர் கெஜ்ரிவால் பணம் அளித்தும் பாஜக தலைமையிலான முனிசிபால் கார்பரேஷன் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் டெல்லியை அசுத்தம் அடைய விட மாட்டோம். நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications