ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்த பெண்! டெல்லியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

சங்கம் விஹாரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கு எம்.எல்.ஏ. தினேஷ் மஹானியா ஆய்வு செய்ய வந்துள்ளார். அப்போது பெண்மணி ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், சங்கம் விஹார் பகுதியை தண்ணீர் மாபியா கும்பல் ஒன்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினார்.
இப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட்டு, அதனை நேரில் அறியும் பொருட்டே தான் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
தான் சென்றபோது, நேரடியாக வராத அந்த கும்பல், அதற்குப் பதிலாக அந்த பெண்மணியை அனுப்பியதாகத் தெரிவித்தார்.
இப்போதெல்லாம், வடமாநிலங்களில் முதல்வரும், எம்.எல்.ஏக்களும் அடி வாங்குவது சகஜகமாகிப் போய்விட்டது.












Click it and Unblock the Notifications