சுஷ்மா பதவி விலக் கோரி வீடு முற்றுகை- டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக கோரி ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் அவரது வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமலாக்க பிரிவால் தேடப்பட்டு வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

AAP protests near Sushma Swaraj's house

லலித் மோடிக்கு மனிதாபிமானத்துடன் உதவியாதாக சுஷ்மா ஸ்சுவராஜ் கூறி வருகிறார். அவருக்கு மத்திய அரசு ஏற்கனவே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. வசுந்தரா ராஜேவிடம் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அமைப்பினர் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜின் வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சியினர் குவிந்து, பதவி விலக கோரியும் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+