டெல்லியில் ஆட்சி அமைக்கிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி! நாளை மறுநாள் அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 32 இடங்கள் கிடைத்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 28 இடங்களைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
இந்நிலையில் ஆளுநர் அழைப்பை ஏற்று ஆலோசனை நடத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடத்திலும் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்க தொடங்கியது. அதேபோல் அக்கட்சியிலும் கூட ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்தும் வலுத்து வந்தது.
இதனால் டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால், எங்களால் பாஜக, காங்கிரசைவிட திறமையான நிர்வாகத்தை வழங்க முடியும். கடந்த இரண்டு நாட்களாக கருத்து தெரிவித்த பொதுமக்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமாறு கூறியுள்ளளனர் என்றார்.
அனேகமாக நாளை மறுநாள் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications