For Quick Alerts
For Daily Alerts
Just In
மோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு
டெல்லி: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜப்பானில் நடைபெறும் இரு நாட்டு பிரதமர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக உறவுகளை வளர்க்க தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஷின்சோ அபே, மோடியிடம் உறுதி அளித்தார்.
அவரது அழைப்பை ஏற்று நன்றி தெரிவித்த நரேந்திரமோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் பெரும் பங்காற்றி வருவதாகவும், இந்த நல்லுறவு தொடர்ந்து புதிய வளர்ச்சியை எட்ட தனது ஒத்துழைப்பு தொடரும் என்றும் பிரதமர் ஷின்சோ அபேவிடம் மோடி உறுதி அளித்தார்.
Comments
English summary
Japanese Prime Minister Shinzo Abe has swiftly invited incoming PM Narendra Modi to make Tokyo the destination of his first overseas trip.
Story first published: Wednesday, May 21, 2014, 8:48 [IST]