ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு: பீட்டா வக்கீலாக ஆஜராகும் காங். மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி!
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் பீட்டாவுக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார்.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா வழக்கறிஞராக காங்கிரஸ் கட்சியின் செய்த் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக வரலாறு காணாத யுக புரட்சியை நடத்திக் காட்டியது தமிழக இளைஞர் சமூகம். இதன்விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை முதலில் தமிழக அரசு கொண்டுவந்தது.

பின்னர் நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது. பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.
இந்த அபிஷேக் மனு சிங்விதான் சேகர் ரெட்டி கூட்டாளிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக ஆஜராக உள்ளார். இதற்கு தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீட்டா வேலையை காட்டத் தொடங்கியிருப்பது தமிழகத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications