ஜாதிவாரி இடஒதுக்கீடு தேவையில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். எம்.ஜி. வைத்யா
டெல்லி: ஜாதிவாரியான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை... பொருளாதார ரீதியான இடஒதுக்கீடே அவசியமானது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் எம்.ஜி. வைத்யா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்:

தற்போது ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஏனெனில் எந்த ஒரு ஜாதியும் பிற்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை.
அதேபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கும் கூட இனி 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை வழங்கலாம். அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு என்ற நடைமுறையையே ஒழித்துக் கட்டிவிடலாம்.
குஜராத்தில் அனைத்து தொழில்துறையும் படேல்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது தேவைதானா? மகாராஷ்டிராவில் மராத்தாக்கள் இடஒதுக்கீடு கோருகிறார். அந்த மாநிலத்தின் பெரும்பான்மையான முதல்வர்கள் மராத்தா சமூகத்தவரே.
பிற மாநிலங்களில் ஜாட்களும் குஜ்ஜார்களும் இடஒதுக்கீடு கோருகின்றனர். உண்மையில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா? அரசுகளே கூட வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த கோரிக்கைகளை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்கின்றன.
ஜாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது ஜாதிய பிரிவினைகளை ஒழிப்பதற்கு பதிலாக அவற்றை இறுக்கமாக நிலைநிறுத்துகின்றன. முதலமைச்சர் அல்லது கலெக்டராக இருப்பவரின் மகனுக்கு இடஒதுக்கீடு தேவைதா? பொருளாதார ரீதியான இடஒதுக்கீடுதான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மராத்தாக்கள், பிராமணர்கள் உட்பட அனைத்து சமூகத்துக்கும் பயன்படும்.
குஜராத்தின் ஹர்திக் படேல் கூறுவதைப் போல, அனைவருக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் அல்லது இடஒதுக்கீட்டை முறையையே அழித்துவிடுங்கள் என்பதை ஆதரிக்கிறேன். அவர் மிகச் சரியாகத்தான் கூறி இருக்கிறார். ஜாதிய அடிப்படையில் இருந்து என்பது மாறி பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என வரும்போது இந்த முறையே நிரந்தரமானதாக இல்லாமல் போய்விடும்.
ஜாதிய இடஒதுக்கீடு என்பது தங்களது ஜாதியை நினைவில் கொள்ளத்தான் வகை செய்யும். அப்படி என்கிற போது எப்படி ஜாதியத்தை நீங்கள் ஒழித்துவிட முடியும்?
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications