மரணம் ஏற்படுத்தும் காரணிகளில் சாலை விபத்துக்களுக்கே முதலிடம் – ஆய்வில் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களின் மரணத்திற்கு காரணமானவற்றில் சாலை விபத்துகள் முதலிடம் வகிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் மரணத்தை விளைவிக்கும் காரணங்களில் சாலை விபத்துக்கள் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற பதிவுகள் கழகம் கூறியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில், 4,00,517 பேர் சாலை விபத்துக்களில் பலியாகி உள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.4 சதவிகிதம் அதிகம் . இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துவதில், சாலை விபத்துக்கள் 34.3 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும், திடீர் மரணங்கள் 7.8 சதவீதம் , நீர்நிலைகளில் மூழ்குதல் 7.5 சதவீதம், விஷம் குடித்தல் 7.3 சதவீதம் , ரயில் விபத்துக்கள் 7.2 சதவீதம் மற்றும் தீ விபத்துக்கள் 5.5 சதவீதம் மரணங்களில் பங்கு வகிக்கின்றன என்று அவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications