சிகிச்சைக்கு பணமில்லை... மீண்டும் ‘வாழ்க்கை’ ஆபர் தந்த ஆசிட் வீசிய கணவர்... மனைவி வழக்கு வாபஸ்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் தன் முகத்தில் ஆசிட் வீசிய தனது கணவருடனே மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே ஆசிட் வீச்சு சம்பவங்களில் மேற்குவங்க மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இதேபோல், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதில் அம்மாநிலம் பின்தங்கியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 29 ஆசிட் வீச்சு சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளது

இந்நிலையில், திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணைக் கொடுமைக் காரணமாக கணவரே மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வழக்கு ஒன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கணவருக்கு எதிராக ஆசிட் வீச்சுக்கு ஆளான மனைவி சாட்சி கூற வந்திருந்தார். சாட்சிக் கூண்டில் ஏறிய அப்பெண், அதிரடியாக, ‘தான் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என்றும், கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' எனத் தெரிவித்தார்.
அப்பெண் இந்த திடீர் மனமாற்றத்தை எதிர்பார்க்காத வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அப்பெண்ணின் விருப்பப்படியே இனி இருவரும் சேர்ந்து வாழலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அப்பெண்ணுக்கு உரிய இழப்பீடு கூடிய விரைவில் வந்து சேரும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை மட்டுமே, சம்பவம் நடந்தபோது மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது. ஆனால் அவரின் முகம் முற்றிலுமாக சிதைந்துள்ளது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் மருத்துவச்செலவுகளை சமாளிக்க அவரது பெற்றோர்களால் இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கை வாபஸ் பெற்றால் மீண்டும் சேர்ந்து வாழலாம் என நண்பர்கள் மூலம் தூது விடுத்துள்ளார் அப்பெண்ணின் கணவர்.
எனவே, மேலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல், ஆசிட் வீசிய கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அப்பெண் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications