நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி - என்ன பிரச்னை?
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்ரமிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்
- "உடல்நிலை சரியில்லை என்றாலும் உள்ளம் சரியாக இருக்கிறது" - ஹார்மோன் பிரச்னைகள் குறித்து ஸ்ருதிஹாசன் பேசியது என்ன?
அவருக்கு என்ன உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்களை விக்ரம் தரப்போ, மருத்துமனை தரப்போ இதுவரை வெளியிடவில்லை.
விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள் கார்த்தி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












Click it and Unblock the Notifications