கலவரமா பண்றீங்க.. உ.பி.யிலிருந்து ராஜஸ்தானுக்கு புல்டோசர் அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. கடுகடுத்த கங்கனா
ஜெய்பூர்: ராஜஸ்தானில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்போம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.
ஈத் பண்டிகையன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் கரோலியில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக அம்மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்து இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் கரோலியில் ஈத் பண்டிகையன்று மசூதிகளில் இருந்த ஒலி பெருக்கிகளை இந்துத்துவ அமைப்பினர் அகற்ற முயன்றனர்.

200-க்கும் மேற்பட்டோர் கைது
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மோதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பாலிவுட் நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை கங்கனா ரனாவத் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

புல்டோசரை அனுப்புவோம்
அப்போது, "அவர்களால் இதுபோன்ற சூழலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம். ராஜஸ்தானில் ஏற்பட்டு இருக்கும் கலவரங்கள் காரணமாக உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. யாரால் வன்முறையை தடுக்க முடியுமோ அந்த அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்." என்றார்.

உத்தரப்பிரதேச மாடல்
உத்தரப்பிரதேசத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சிறுபான்மையினர், தலித்துகளின் வீடுகளை அம்மாநில அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து வந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ராம நவமி ஊர்வலத்தின்போது கலவரங்கள் வெடித்தன.

ம.பி., ஜஹாங்கிர்புரி சம்பவங்கள்
இதில் மத்திய பிரதேசத்தில் கலவரம் ஏற்பட்ட கார்கோன் பகுதியில் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு அம்மாநில பாஜக அரசு இடித்தது. இதேபோல் டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போதும் கலவரம் வெடித்ததில் பலர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அங்குள்ள இஸ்லாமிய வீடுகளும் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜஸ்தானில் புல்டோசர்களை கொண்டு வர வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்து இருப்பது கவனிக்கத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications